சேற்றில் சிக்கிய பசுமாடு மீட்பு


சேற்றில் சிக்கிய பசுமாடு மீட்பு
x

சேற்றில் சிக்கிய பசுமாடு மீட்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நுத்தப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 40), விவசாயி. இவர் தனது வயலில் பசுமாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வயலின் அருகே உள்ள புதைக் குழியில் பசுமாடு இறங்கி சேற்றில் சிக்கிக் கொண்டது. பசுமாட்டை வெளியே கொண்டு வர முத்துசாமி பல்வேறு முயற்சிகள் செய்தும் வெளியே கொண்டு வர முடியவில்லை. இதனை தொடர்ந்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சேற்றில் சிக்கிய பசுமாட்டை கயிறு கட்டி வெளியே மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

1 More update

Next Story