ஓய்வுபெற்ற அரசு ஊழியர், கார் மோதி பலி

நாங்குநேரியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர், கார் மோதி பலியானார்.
நாங்குநேரி:
நாங்குநேரி குமரன் தெருவைச் சேர்ந்தவர் சப்பானி (வயது 72). இவர் நாங்குநேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நாங்குநேரி பைபாஸ் சாலையில் உள்ள நிலத்தில் நேற்று காலை விவசாய பணிக்கு சென்றார். பின்னர் சாலையை கடந்து வரும்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத காா் மோதி சம்பவ இடத்திலேயே சப்பானி இறந்தாா். தகவல் அறிந்ததும் நாங்குநேரி போலீசார் விரைந்து சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





