ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்


ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்
x

தூத்துக்குடியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.

தர்ணா போராட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ்நிறுத்தம் அருகே தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் பெ.சாம்பசிவன் தலைமை தாங்கினர். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாபு சிவராஜகிருபாநிதி, பே.சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தூத்துக்குடி வட்டக் கிளை செயலாளர் பா.செல்வராஜ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் முத்தையா கோரிக்கையை விளக்கி பேசினார். தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராமர் ஆகியோர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக மாநில இணை செயலாளர் லீலாவதி கலந்து கொண்டு பேசினார்.

கோரிக்கைகள்

போராட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டமான தன்பங்கேற்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு வழங்கும் அதே நாளில் அகவிலைப்படி வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் 10 சதவீதம் வழங்க வேண்டும், மாவட்ட கல்வி அலுவலகத்தில் தீர்வு காணப்படாமல் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் பணப்பலன் தரும் கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

போராட்டத்தில் ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கண்ணையா நன்றி கூறினார்.


Next Story