ஈரோடு தேர்தல் பிரசாரத்திற்கு சென்று திரும்பிய கார்த்திசிதம்பரம் எம்.பி. கார் விபத்தில் சிக்கியது


ஈரோடு தேர்தல்  பிரசாரத்திற்கு சென்று திரும்பிய கார்த்திசிதம்பரம் எம்.பி. கார் விபத்தில் சிக்கியது
x

ஈரோடு தேர்தல் பிரசாரத்திற்கு சென்று திரும்பிய கார்த்திசிதம்பரம் எம்.பி. கார் விபத்தில் சிக்கி உள்ளது.

கரூர்

திருச்சியில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு கரூர் நோக்கி மினி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில் உள்ள திருச்சி-கரூர் மெயின் சாலையில் வந்தபோது, எதிரே மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த மதன்குமார் (வயது 40) என்பவர் ஒரு காரை ஓட்டி கொண்டு கரூரில் இருந்து மகாதானபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த மினி பஸ் மீது கார் அதிவேகமாக மோதியது. கார் மோதிய வேகத்தில் திரும்பி, ஈரோட்டில் தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த கார்த்தி சிதம்பரம் எம்.பி.யின் கார் மீதும் மோதி நின்றது. இதில் விபத்தில் காரை ஓட்டி வந்த மதன்குமார் படுகாயம் அடைந்தார். மேலும் கார்த்தி சிதம்பரம் வந்த காரின் முன் பக்கம் சேதம் அடைந்தது. அவருடன் வந்த யாரும் காயம் இல்ரம் எம்.பி. தன்னுடன் வந்த மற்றொரு காரில் ஏறி அங்கிருந்து கும்பகோணம் புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கார்த்தி சிதம்பரம் எம்.பி.யின் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story