வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம்


வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம்
x

ஊரக வளர்ச்சி துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை

ஊரக வளர்ச்சி துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் மீதான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

அப்போது அவர் மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2, பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், நமக்கு நாமே திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட இலக்கு விகிதாசார சாதனைகள் மீதான விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக வீடு வழங்கும் திட்டப்பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் ஊரக சாலை பணிகள் ஆகியவற்றை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். நாளது தேதி வரை நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

வளர்ச்சி பணிகளை...

மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை எதிர் வரும் மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொண்டு முன்னேற்றம் காண்பிக்க வேண்டும். மேலும் முடிக்கப்பட்ட பணிகளுக்கு காலதாமதமின்றி பட்டியல் தொகை விடுவிக்கப்பட வேண்டும் என அனைத்து அலுவலர்களுக்கும் கலெக்டர் முருகேஷ் அறிவுரைகள் வழங்கினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர் பிரதாப் சிங், உதவி கலெக்டர் (பயிற்சி) ரஷ்மி ராணி, செயற் பொறியாளர் ராமகிருஷ்ணன், அனைத்து உதவி இயக்குனர் நிலையிலான அலுவலர்கள், அனைத்து உதவி செயற் பொறியாளர்கள் (ஊரக வளா்ச்சி), அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story