புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மணிப்பூரில் பழங்குடியினர் பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், அங்கு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி, பாதுகாப்பு வேண்டியும் புரட்சி பாரதம் கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் கருப்புசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் தனியார் பள்ளிக்கூடங்களை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





