பலத்த மழையால் சேதமடைந்த சாலை


பலத்த மழையால் சேதமடைந்த சாலை
x
தினத்தந்தி 1 Oct 2022 6:45 PM GMT (Updated: 1 Oct 2022 6:47 PM GMT)

மன்னார்குடி அருேக காரிக்கோட்டையில் பலத்த மழையால் சேதமடைந்த சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடி அருேக காரிக்கோட்டையில் பலத்த மழையால் சேதமடைந்த சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரிக்கோட்டையில் காரிக்கோட்டை- செருமங்கலம்- மேலவாசல் ஆகிய 3 ஊர்களையும் இணைக்கும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் செருமங்கலம் மற்றும் காரிக்கோட்டையில் உள்ள 6-ம் வகுப்பு முதல் 10-ம்வகுப்பு வரை பயிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அருகிலுள்ள மேலவாசலில் உள்ள அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

சீரமைக்க கோரிக்கை

இந்த சாலை ஏற்கனவே பழுதடைந்து குண்டும்- குழியுமாக இருந்தது. இந்தநிலையில் தற்போது பெய்த மழையால் இந்த சாலை மேலும் சேதமடைந்து பள்ளங்களில் நீர் நிரம்பி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மாணவ- மாணவிகள் இந்த சாலையை கடந்து செல்லும் போது மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் இந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகளும் இந்த சாலை வழியாக செல்கிறார்கள். எனவே குண்டும்- குழியுமாக மோசமான நிலையில் உள்ள காரிக்கோட்டை சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story