சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா
x

சங்கர்நகர் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா நடந்தது.

திருநெல்வேலி

சங்கர்நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளியில் தர நிர்ணய கழகம், குடிமக்கள் நுகர்வோர் மன்றம், நாட்டு நலப்பணி திட்டம், சங்கர்நகர் உட்கோட்ட காவல்துறை ஆகியவை சார்பில் உலக தர நாள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு, சாலை பாதுகாப்பு, சட்ட விழிப்புணர்வு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ரெங்கநாதன் வரவேற்று பேசினார். உலக தர நாள் குறித்தும், தர முத்திரைகள் குறித்தும் பள்ளி தர நிர்ணய கழக திட்ட அலுவலர் கணபதி சுப்பிரமணியன் பேசினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் மயிலப்பன், கிறிஸ்டி, போலீஸ் பால்மதி ஆகியோர் போதை தடுப்பு, சாலை பாதுகாப்பு, சட்ட விழிப்புணர்வு, பெண்கள் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு உரையாற்றினார். தொடர்ந்து உலக தர நாள் மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story