கருப்பூர் அருகே துணிகரம்அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளைஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை


கருப்பூர் அருகே துணிகரம்அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளைஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை
x

கருப்பூர் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை நடந்துள்ளது. ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்

சேலம்

கருப்பூர்

கருப்பூர் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை நடந்துள்ளது. ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

பள்ளி ஆசிரியர்

சேலம் கருப்பூரை அடுத்த ஆணைக்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் என்ற தங்கராஜ் (வயது 54). இவருக்கு சொந்த ஊர் ஓசூர். இவர் சேலத்தில் தங்கி குரங்குச்சாவடியில் தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். சம்பத் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்று இருந்தார்.

ஊரில் இருந்த சேலம் வந்த அவர், வீட்டுக்கு சென்றார். அங்கு பீரோ கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரம், 3 பவுன் தங்க சங்கிலி திருட்டு போய் இருந்தது.

போலீசார் விசாரணை

அதேபோன்று பக்கத்து வீட்டில் வசித்து வரும் சுபாஷ் (33) என்பவர் வீட்டிலும் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. ஆனால் கொள்ளை போனவை எவை என்பது குறித்த முழு விவரம் தெரியவில்லை என கூறப்படுகிறது.

இந்த இரு சம்பவங்கள் குறித்தும் அறிந்த கருப்பூர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த வீடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கருப்பூர் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story