சேவல் சூதாட்டம்; 2 வாலிபர்கள் சிக்கினர்

சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் சிக்கினர்.
நெகமம்
நெகமம் அடுத்த மஞ்சம்பாளையத்தில் சேவல் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நெகமம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அங்கு சேவல் மற்றும் பணம் வைத்து 2 பேர் சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், மன்றாம்பாளையத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 34), கொண்டேகவுண்டன்பாளையத்தை சேர்ந்த உதயகுமார் (22) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 சேவல் மற்றும் ரூ.13,400 பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





