ரவுடி கைது


ரவுடி கைது
x

தூத்துக்குடியில் தொழிலாளியை கத்தியால் தாக்கிய ரவுடி கைது

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மீனவர் காலனியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் ஜெயக்குமார் (வயது 42). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று அரசமரம் பகுதியில் வேலைக்கு சென்ற போது அங்கு மதுபோதையில் வந்த தூத்துக்குடி கே.வி.கே. நகர் பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் பொன் முனியசாமி (34) என்பவர் ஜெயக்குமாரிடம் தகராறு செய்து அவரை கத்தியால் தாக்கி கொலை செய்ய முயற்சி செய்து உள்ளார். இதுகுறித்து ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில் மத்திய பாகம் சப்-இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள் வழக்குப்பதிவு செய்து பொன் முனியசாமியை கைது செய்தார். பொன் முனியசாமி மீது ஏற்கனவே தூத்துக்குடி மத்தியபாகம் மற்றும் வடபாகம் போலீஸ் நிலையங்களில் 11 வழக்குகள் உள்ளதாகவும், ரவுடி பட்டியலில் அவருடைய பெயர் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story