பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.1 கோடி முறைகேடு: குடிசை மாற்று வாரிய என்ஜினீயர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்


பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.1 கோடி முறைகேடு: குடிசை மாற்று வாரிய என்ஜினீயர்கள்    2 பேர் பணியிடை நீக்கம்
x

பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.1 கோடி முறைகேடு நடந்தது தொடர்பாக குடிசை மாற்று வாரிய என்ஜினீயர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர்

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 188 வீடுகள் கட்டுவதற்கு சுமார் ரூ.27.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு வீடுகள் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்னும் இந்த பணிகள் நிறைவடையாத நிலையில், இந்த வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக பல்வேறு புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்றது.அதன்பேரில் கடலூர் ஊழல் தடுப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த திட்டத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து இதுதொடர்பாக ஊழல் தடுப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணியிடை நீக்கம்

இந்த நிலையில் 2020-ம் ஆண்டில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கடலூர் கோட்ட செயற்பொறியாளராக இருந்த எட்வின் சாம், உதவி பொறியாளர் ஜெயக்குமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சென்னை குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குனர் கோவிந்தராவு உத்தரவிட்டார். இவர்களில் எட்வின் சாம் தற்போது சென்னையில் கண்காணிப்பு பொறியாளராகவும், ஜெயக்குமார் காஞ்சீபுரத்தில் உதவி பொறியாளராகவும் பணியாற்றி வந்தனர்.


Next Story