"100 சிலம்ப ஆசான்களுக்கு தலா ரூ.1 லட்சம்" - அமைச்சர் மெய்யநாதன் தகவல்


100 சிலம்ப ஆசான்களுக்கு தலா ரூ.1 லட்சம் - அமைச்சர் மெய்யநாதன் தகவல்
x

தமிழக பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்க தொடர் நடவடிக்கைகளை தமிழக முதல் அமைச்சர் எடுத்து வருவதாக அமைச்சர் கூறினார்.

சென்னை,

அமைச்சர் மெய்யநாதன் பேட்டி ஒன்றில் கூறியதாவது, சிலம்பம் விளையாட்டை மீட்டெடுக்கும் வகையில், தமிழகத்தில் சிறந்த சிலம்பம் ஆசான்கள் 100 பேருக்கு தலா 1 லட்சம் வீதம் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளனர். இதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டு முதல் அமைச்சர் கையால் வழங்கி பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது.

தமிழக பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்க தொடர் நடவடிக்கைகளை தமிழக முதல் அமைச்சர் எடுத்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். வேலை வாய்ப்பில் விளையாட்டுத்துறைக்கான 3% உள் ஒதுக்கீட்டில் சிலம்பம் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story