ஒலி, ஒளி அமைப்பாளரிடம் கத்தி முனையில் ரூ.35 ஆயிரம், செல்போன் பறிப்பு


ஒலி, ஒளி அமைப்பாளரிடம் கத்தி முனையில் ரூ.35 ஆயிரம், செல்போன் பறிப்பு
x

ஒலி, ஒளி அமைப்பாளரிடம் கத்தி முனையில் ரூ.35 ஆயிரம், செல்போன் பறிப்பு

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனம் அருகே உள்ள கொள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி(வயது 47). ஒலி, ஒளி அமைப்பாளரான இவர், தீவனூர் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென ராஜியின் கழுத்தில் கத்தியை வைத்து செல்போன், ரூ.35 ஆயிரத்தை பறித்துச்சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story