ரூ.4 லட்சம் செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு


ரூ.4 லட்சம் செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
x

மதுரை மாவட்டத்தில் போலீசாரால் மீட்கப்பட்ட ரூ.4¾ லட்சம் மதிப்பிலான செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

மதுரை

மதுரை,

மதுரை மாவட்டத்தில் போலீசாரால் மீட்கப்பட்ட ரூ.4¾ லட்சம் மதிப்பிலான செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

சைபர் கிரைம்

மதுரை மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் போலீசார் மூலம் மீட்கப்பட்டு அவ்வப்போது உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2 வாரங்களில் சைபர்கிரைம் மூலம் ரூ.4 லட்சத்து 67 ஆயிரம் மதிப்புள்ள 30 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த 30 செல்போன்களை, அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வழங்கினார். இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது:-

மதுரை புறநகர் காவல்நிலையங்களில், இதுவரை ரூ.1 கோடியே 1 லட்சத்து 71 ஆயிரத்து 850 மதிப்புள்ள 726 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. செல்போன்கள் தொலைந்து போனால் அருகில் உள்ள போலீசில் எந்த வித தயக்கமும் இன்றி உடனடியாக புகார் அளிக்க வேண்டும். அப்போது தான் போலீசாரால் அதனை கண்டறிய முடியும்.

ஆன்லைன் மோசடி

இதுபோல், கடந்த 2 வாரங்களில், வங்கிகளிலிருந்து பேசுவதாக கூறி பொதுமக்களின் வங்கி கணக்கு விவரங்களை தெரிந்து கொண்டு நூதனமான முறையில் நடந்த திருட்டு வழக்குகளில் ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 404 மீட்கப்பட்டு உள்ளன. இது போன்ற திருட்டு வழக்குகளில் இதுவரை ரூ.26 லட்சத்து 64 ஆயிரத்து 572 மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மோசடியாக வங்கியிலிருந்து பேசுவதாக கூறி ஏமாற்றும் நபர்களிடம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். குறிப்பாக ரகசிய எண், வங்கிகணக்கு எண், ஓ.டி.பி. போன்ற விபரங்களை முன்பின் தெரியாதவர்களிடம் கொடுத்து ஏமாற வேண்டாம். ஆன்லைன் வேலைவாய்ப்பு வாக்குறுதியை நம்பியும் முன்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். https://www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மோசடி தொடர்பாக 24 மணிநேரமும் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story