கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம்


கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம்
x

கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

சேலம்

எடப்பாடி:

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரத்தில் நேற்று வாரச்சந்தை கூடியது. சந்தையில் மொத்தம் 6 ஆயிரத்து 500 ஆடுகள், 2 ஆயிரத்து 500 கோழி மற்றும் சேவல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று சந்தையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.4 ஆயிரத்து 600 முதல் ரூ.6 ஆயிரத்து 300 வரையும், 20 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.9 ஆயிரத்து 900 முதல் ரூ.11 ஆயிரம் வரையும், வளர்ப்பு குட்டி ஆடுகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் சேவல்கள் தரத்துக்கு ஏற்ப ரூ.1,000 முதல் ரூ.3 ஆயிரத்து 500 வரை விற்பனையானது. கோழிகள் ரூ.100 முதல் ரூ.1,000 வரையும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் சந்தைக்கு காய்கறிகள் 100 டன் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தது. மேலும் 60 கிலோ எடையுள்ள சின்ன மற்றும் பெரிய வெங்காயம் ரூ.1200 முதல் ரூ.2 ஆயிரத்து 400 வரையும், தக்காளி கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் பலாப்பழம் ரூ.200 முதல் ரூ.500 வரை தரத்திற்கு ஏற்ப விற்பனையானது. நேற்று மட்டும் சந்தையில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story