வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் நகை, ரொக்கம் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் நகை, ரொக்கம் திருட்டு
x

கலசபாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் நகை, ரொக்கம் திருடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

கலசபாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் நகை, ரொக்கம் திருடப்பட்டுள்ளது.

கலசபாக்கம் அடுத்த மோட்டூர் கிராமம் ரோடு தெருவை சேர்ந்த ரமேஷ். இவர் அருகில் உள்ள நட்சத்திர கோவில் அருகில் சைக்கிள் ஷாப் நடத்தி வருகிறார். இவர் நேற்று ஜவுளி எடுப்பதற்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். மீண்டும் மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் மெயின் கேட்டு பூட்டப்பட்டு இருந்த நிலையில் வீட்டில் பக்கவாட்டில் உள்ள மாடிப்படி வழியாக உள்ளே வரும் மற்றொரு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த சுமார் 10 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சமும் திருடப்பட்டிருந்தது. இது குறித்து கலசபாக்கம் போலீசில் ரமேஷ் புகார் செய்துள்ளார். அதன் பேரில் கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப் பகலிலேயே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு நடந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story