எழும்பூர் ரெயில் நிலையத்தில் வாலிபரிடம் ரூ.64½ லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்


எழும்பூர் ரெயில் நிலையத்தில் வாலிபரிடம் ரூ.64½ லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்
x

எழும்பூர் ரெயில் நிலையத்தில் வாலிபரிடம் ரூ.64½ லட்சம் அமெரிக்க டாலரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் பிளாஸ்டிக் கவரில் சுற்றி அமெரிக்க டாலரை கொண்டு செல்ல முயன்றது தெரிந்தது.

அவரிடம் இருந்து மொத்தம் 8 பண்டல்களில் வைத்திருந்த 80 ஆயிரம் அமெரிக்க டாலரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.64 லட்சத்து 45 ஆயிரம் என்று சொல்லப்படுகிறது.

மேலும் உரிய ஆவணங்கள் இன்றி சென்னையில் இருந்து அமெரிக்க டாலரை ரெயில் மூலம் திருச்சிக்கு கடத்திச் செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரெயில் மூலம் அமெரிக்க டாலரை கடத்த முயன்ற திருச்சி மாவட்டம் தேனூரை சேர்ந்த ஜமில் அகமது (வயது 26) என்பவரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்து, அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story