தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 ஆயிரம் மோசடி


தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 ஆயிரம் மோசடி
x

ஓசூரில் தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 ஆயிரம் மோசடி; சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

ஓசூர் பாகலூர் ரோடு விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 59). ஓசூரில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ந் தேதி நாகராஜன் செல்போனுக்கு பேசிய மர்ம நபர், தான் அரசு கொள்முதல் துறையில் இருந்து பேசும் ராணுவத்தின் உயர் அதிகாரி என கூறி அறிமுகமாகி உள்ளார். மேலும் நாகராஜன் நிறுவனத்தில் இருந்து ராணுவத்திற்கு உரிய தளவாட பொருட்கள் கொள்முதல் செய்வதாக உறுதியளித்து அதற்காக, 80 ஆயிரம் ரூபாய் தருமாறும் கேட்டுள்ளார். அதை நம்பி நாகராஜன் அவர் கூறிய மொபைல் எண்களுக்கு பணத்தை ஆன்லைனில் அனுப்பினார். அதன் பின்னர் அந்த நபர் மொபைல் எண்ணை எடுக்கவில்லை; பின்னர் சுவிட்ச்ஆப் ஆகியிருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நாகராஜன் இது குறித்த கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story