புகையிலை பொருட்களை விற்ற 9 கடைகளுக்கு ரூ.1,800 அபராதம் அபராதம்


புகையிலை பொருட்களை விற்ற 9 கடைகளுக்கு ரூ.1,800 அபராதம் அபராதம்
x
தினத்தந்தி 11 April 2023 6:45 PM GMT (Updated: 11 April 2023 6:45 PM GMT)

புகையிலை பொருட்களை விற்ற 9 கடைகளுக்கு ரூ.1,800 அபராதம்

கன்னியாகுமரி

களியக்காவிளை:

நாகர்கோவில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரின் அறிவுரைப்படி மேல்புறம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சார்லின் தலைமையில் அதிகாரிகள் களியக்காவிளை பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை சோதனை நடத்தினர். அப்போது 50-க்கும் மேற்பட்ட கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். இதில் 9 கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.1,800 அபராதம் விதித்தனர். இந்த சோதனையில் சுகாதார ஆய்வாளர்கள் ஸ்ரீகுமார், செயின்ஸ் குமார், தங்கராஜ், ஜான் பெனடிக்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story