காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம்


காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி  ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம்
x

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

சேலம்,

ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணி நெருக்கடிகளை கைவிட வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, சேலம் மாவட்டத்தில் நேற்று ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிகளை புறக்கணித்தனர். இதன் காரணமாக ஊரக வளர்ச்சி முகமை அலுவலகங்கள் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், வேலைநிறுத்த போராட்டத்தால் அலுவலக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் கோரிக்கைகள் மீது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.


Next Story