ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் நேற்று 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 2 நாட்கள் சிறு விடுப்பு எடுத்து வேலை நிறுத்தம் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாயத்து செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் மொத்தம் 860 அலுவலர்களில் 485 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் பணி பாதிப்பு ஏற்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





