மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்
எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே மேலவண்ணாரிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன் மகன் கணேசன் (வயது 39). தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று கணேசன் கிணற்றில் குளிக்க சென்றதாக தெரிகிறது. குளிப்பதற்காக மோட்டார் சுவிட்ச்சை இயக்கியபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்த புகாரின் பேரில் உலகம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





