அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம், ஓய்வூதிய ஆணை


அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம், ஓய்வூதிய ஆணை
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 25 Jan 2023 6:45 PM GMT)

சங்கரன்கோவிலில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம், ஓய்வூதிய ஆணையை ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அம்பேத்கர் நகர் சமுதாய நலக்கூடத்தில் கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஆணை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பெட்டகம், ஓய்வூதிய ஆணை, மற்றும் ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள், முதியோர்களுக்கு ஓய்வூதிய ஆணை ஆகியவற்றை வழங்கினார்.

பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, பொருளாளர் லாசர் என்ற சதாசிவம், நகர துணை செயலாளர்கள் கே.எஸ்.எஸ்.மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய், ஆதி திராவிடர் அணி யோசப் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story