காலா பாணி நாவலுக்காக எழுத்தாளர் மு. ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது...!


காலா பாணி நாவலுக்காக எழுத்தாளர் மு. ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது...!
x

காலா பாணி நாவலுக்காக எழுத்தாளர் மு. ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

காளையார் கோவில் போரை முன் வைத்து எழுதப்பட்ட காலா பாணி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காளையார் கோவில் போரை அடிப்படையாக கொண்டு ஐஏஎஸ் அதிகாரி மு.ராஜேந்திரன் காலா பாணி நாவலை இயற்றி இருந்தார்.

அன்றைய கால தமிழர்களின் வாழ்க்கை, சூழல், ஆங்கிலேயர்களின் நடவடிக்கைகள் குறித்து நாவலில் இடம்பெற்றுள்ளது. 1801-ம் ஆண்டு 6 மாதங்கள் நடைபெற்ற காளையார் கோவில் போரை முன் வைத்து எழுதப்பட்ட நாவல் காலா பாணி ஆகும்.

தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ராஜேந்திரன். இவர் டான்சீறி சோமா விருது, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.


Next Story