பாய்மர படகு போட்டி
பாய்மர படகு போட்டி நடந்தது.
ராமநாதபுரம்
ஆர்.எஸ்.மங்கலம்
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கடலூர் ஊராட்சி மோர்ப்பண்ணை மீனவர் கிராமத்தில் ஸ்ரீராண பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் வைகாசி விசால திருவிழாவை முன்னிட்டு நேற்று பாய்மர படகு போட்டி நடந்தது. கடலுக்குள் 6 மைல் தூரம் எல்லையாக வரையறுக்கப்பட்டு படகுக்கு 6 பேர் வீதம் அனுமதிக்கபட்டு போட்டி நடந்தது. மொத்தம் 12 படகுகள் போட்டியில் கலந்து கொண்டன. போட்டியை கிராமத் தலைவர் மாடம்பூரான், செயலாளர் மலைக்கண்ணன் மற்றும் கிராம நிர்வாகிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். போட்டியில் இலக்கை அடைந்து முதல் பரிசாக ரூ.30,001-ஐ ஈஸ்வரன் படகும், இரண்டாம் பரிசாக ரூ. 25,001-ஐ பாலமுருகன் படகும், 3-ம் பரிசாக ரூ.20,001-ஐ பாலாஜி படகும், 4-ம் பரிசாக ரூ.15,001-ஐ காளீஸ்வரன் படகும் பெற்றன.
Related Tags :
Next Story