போதை மாத்திரைகள், ஊசி விற்பனை; பிரபல ரவுடி கைது


போதை மாத்திரைகள், ஊசி விற்பனை; பிரபல ரவுடி கைது
x

போதை மாத்திரைகள், ஊசி விற்பனை தொடர்பாக பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி

திருச்சி அரியமங்கலம் மலையப்பநகர் பகுதியில் சிறுவர்களுக்கும், பொதுமக்களுக்கும் போதை மாத்திரைகள், போதை ஊசிகள் விற்கப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் சுந்தராஜனுக்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி அரியமங்கலம் போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கு மதன் (வயது 39) என்ற பிரபல ரவுடி போதை ஊசிகள் மற்றும் மாத்திரைகளை விற்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மதனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 30 போதை மாத்திரைகள், 2 போதை ஊசி மருந்து பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மதன் மீது சுமார் 25 வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story