போதை ஊசி விற்பனை: மேலும் ஒருவர் கைது


போதை ஊசி விற்பனை:  மேலும் ஒருவர் கைது
x

சின்னமனூரில் போதை ஊசி விற்பனையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனா்

தேனி

சின்னமனூரில் கடந்த சில நாட்களாக போதை ஊசி விற்பனை செய்ததாக பலர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கைதான திருச்சியை சேர்ந்த ஜோனத்தன் மார்க்கிடம் விசாரணை நடத்தியதில் சின்னமனூர் அய்யனார்புரத்தை சேர்ந்த நிஷாந்த் (வயது 20) சுமார் 20-க்கும் மேற்பட்ட போதை மருந்து பாட்டில்களை வாங்கி கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இந்நிலையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான அதிகாரிகள் அவரை இன்று கைது செய்தனர். மேலும் போதை மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story