புகையிலை பொருட்கள் விற்பனை:வியாபாரி மீது வழக்கு


புகையிலை பொருட்கள் விற்பனை:வியாபாரி மீது வழக்கு
x
தினத்தந்தி 30 July 2023 6:45 PM GMT (Updated: 30 July 2023 6:46 PM GMT)

கடமலைக்குண்டுவில் புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

கடமலைக்குண்டு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் முத்தாலம்பாறை பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது சோலைத்தேவன்பட்டியில் பால்சாமி (வயது 48) என்பவரின் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 10 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் பால்சாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story