நம்பியூரில் சலூன் கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை


நம்பியூரில் சலூன் கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
x

நம்பியூரில் சலூன் கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

ஈரோடு

நம்பியூர்

நம்பியூர் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 47). சலூன் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு் தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்த அவருடைய மகன் சஞ்சய் நம்பியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லோகநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மதுகுடிக்கும் பழக்கத்துக்கு அடிமையான லோகநாதனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்' என்பது தெரியவந்தது.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story