சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.54 லட்சம்


சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.54 லட்சம்
x

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்களில் ரூ.54 லட்சம் காணிக்கையாக கிடைத்தது.

திருச்சி

சமயபுரம்:

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை, கோவில் நிர்வாகம் சார்பாக மாதம் இருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி கடந்த மாதம் 7 மற்றும் 21-ந் தேதிகளில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இந்நிலையில் மூன்றாவது முறையாக நேற்று கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் காணிக்கையாக ரூ.54 லட்சத்து 17 ஆயிரத்து 434, 1 கிலோ 406 கிராம் தங்கமும், 2 கிலோ 619 கிராம் வெள்ளியும், 38 வெளிநாட்டு பணம் மற்றும் 209 வெளிநாட்டு நாணயங்களும், திருப்பணிக்காக ரூ.81 ஆயிரத்து 530 கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.


Next Story