சாம்பல் புதன் வழிபாடுடன் தவக்காலம் தொடங்கியது


சாம்பல் புதன் வழிபாடுடன் தவக்காலம் தொடங்கியது
x
திருப்பூர்


இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை புனித வெள்ளி தினமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள். அவர் 3-வது நாளில் உயிர்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். அதற்கு முந்தைய 40 நாட்களும், இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூரும் வகையில் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள்.

இயேசுவின் சிலுவைப்பாடுகளால் உலக மக்கள் மீட்பு பெறவும், கிறிஸ்தவ வாழ்வின் அன்பு, அமைதி, சகிப்புத்தன்மை, மன்னிப்பு ஆகியவற்றை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் சாம்பல் புதன் என்று அழைக்கப்படும் விபூதி புதன் அல்லது திருநீற்று புதன் முதல் புனித வெள்ளி வரை 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த நாட்கள் துக்க நாட்கள், நோன்பு நாட்கள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் நேற்று தொடங்கியது. சாம்பல் புதனை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் அதிகாலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பூர் குமரன் ரோடு புனித கத்தரீனம்மாள் தேவாலயம், குமார் புனித சூசையப்பர் தேவாலயம், நல்லூர் நற்கருணைநாதர் தேவாலயம், இடுவம்பாளையம் புனித சூசையப்பர் தேவாலயம் உள்ளிட்டவற்றில் சாம்பல் புதன் வழிபாடு நேற்று நடைபெற்றது. சிறப்பு திருப்பலியில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். கிறிஸ்தவர்கள் நெற்றியில் பாதிரியார்கள் சாம்பல் விபூதியிட்டு தவக்காலத்தை தொடங்கி வைத்தனர்.


Next Story