மணல் கடத்தியவர் கைது


மணல் கடத்தியவர் கைது
x

கங்கைகொண்டான் அருகே மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

கங்கைகொண்டான்:

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கங்கைகொண்டான் அருகே வெங்கடாசலபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 54) என்பவர் மாட்டு வண்டியில் ஆற்று மணலை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து ராமகிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் ஆற்று மணலுடன் மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story