டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது

டிராக்டரில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
இட்டமொழி:
காரியாண்டி அருகே உள்ள வெங்கட்ராயபுரம் குளத்தில் நேற்று முன்தினம் டிராக்டரில் சிலர் மணல் கடத்துவதாக வடக்கு விஜயநாராயணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகப்பெருமாள் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். டிராக்டரை பறிமுதல் செய்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட வெங்கட்ராயபுரத்தைச் சேர்ந்த பரமசிவன் (வயது 37) என்பவரை கைது செய்தனர். மேலும் டிராக்டர் உரிமையாளர் வெங்கட்ராயபுரத்தைச் சேர்ந்த சுடலை (45), வீரனாஞ்சேரியைச் சேர்ந்த இசக்கிமுத்து (25) ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





