மணல் கடத்தல்; 5 பேர் கைது


மணல் கடத்தல்; 5 பேர் கைது
x

விக்கிரமசிங்கபுரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அனவன்குடியிருப்பு வடக்கு தெருவை சேர்ந்த சரவணன் (வயது 34), அதை ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் (41), அய்யப்பன் (41) மற்றும் பொதிகையடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (58), அகஸ்தியர்புரம் சிவகுமார் (40) ஆகியோர் அனவன் குடியிருப்பு பகுதியில் மணல் கடத்துவதாக விக்கிரமசிங்கபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story