மணல் கடத்தல்

பாபநாசம் பகுதியில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பாபநாசம்:-
பாபநாசம் பகுதியில் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில் தேவராயன் பேட்டை குடமுருட்டி ஆற்றிலிருந்து 3 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவர்கள், அவற்றை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீசார் 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





