செஞ்சி அருகேமணல் கடத்த முயற்சி; 3 டிப்பர் லாரிகள் பறிமுதல்


செஞ்சி அருகேமணல் கடத்த முயற்சி; 3 டிப்பர் லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 19 Feb 2023 6:45 PM GMT (Updated: 19 Feb 2023 6:46 PM GMT)

செஞ்சி அருகே மணல் கடத்த முயன்ற சம்பவத்தில் 3 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம்


செஞ்சி,

செஞ்சியை அடுத்த சத்தியமங்கலத்தில் மணல் கடத்தல் நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் ராஜாராம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது 3 டிப்பர் லாரிகளில் மர்மநபர்கள் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். உடனே மர்ம நபர்கள் லாரிகளை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து 3 லாரிகளையும் பறிமுதல் செய்து சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும் இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story