மணல் கடத்தல்; டிரைவர் கைது


மணல் கடத்தல்; டிரைவர் கைது
x

பணகுடி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட மினிலாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

பணகுடி:

பணகுடியை அடுத்த பெருங்குடி ஓடையில் மணல் கடத்தப்படுவதாக பணகுடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு மினிலாரியில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த அரிகிருஷ்ணன் என்பவர் தப்பி ஓடிவிட்டார். லெப்பைகுடியிருப்பை சேர்ந்த மினிலாரி டிரைவர் கணபதிராஜா (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்து மினிலாரியை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story