மேலக்கால் வைகை ஆற்றில் மோட்டார் சைக்கிளில் மணல் திருட்டு- 27 மணல் மூடைகள் பறிமுதல்


மேலக்கால் வைகை ஆற்றில் மோட்டார் சைக்கிளில் மணல் திருட்டு- 27 மணல் மூடைகள் பறிமுதல்
x

மேலக்கால் வைகை ஆற்றில் மோட்டார் சைக்கிளில் மணல் திருடப்பட்டது. 27 மணல் மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுரை

சோழவந்தான்

சோழவந்தான் அருகே மேலக்கால் வைகை ஆற்றில் மணல் கடத்திச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன் தலைமையில் போலீசார் மேலக்கால் வைகை ஆற்றுப்பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட இடத்தில் சுற்றி வளைத்தனர்.

போலீசார் வருவதைக் கண்டதும் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் 27 மணல் மூடைகளை போலீசார் கைப்பற்றினர்.

தப்பி ஓடிய மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்த மணி, வினோத்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story