சந்தனம், செம்மரங்கள் வெட்டி சாய்ப்பு

ஆலங்குடி அருகே சந்தனம், செம்மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது.
ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை மேலபட்டியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 43), விவசாயி. இவர் தனது தோட்டத்தில் செம்மரம் மற்றும் சந்தன மரங்களை வளர்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த 17-ந் தேதி இவரது தோட்டத்தில் புகுந்த மர்ம ஆசாமிகள் ஒரு சந்தன மரத்தையும், 5 செம்மரங்களையும் வெட்டி சாய்த்தனர். இந்த சம்பவம் குறித்து சுந்தர்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மரங்களை வெட்டி சாய்த்த மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





