சிவன் கோவில்களில் சங்காபிஷேகம்


சிவன் கோவில்களில் சங்காபிஷேகம்
x

கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி சிவன் கோவில்களில் நேற்று சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர்

கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி சிவன் கோவில்களில் நேற்று சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சொக்கநாதசுவாமி கோவில்

விருதுநகர் மீனாட்சி சமேத சொக்கநாத சுவாமி கோவிலில் கார்த்திகை 2-வது சோம வாரத்தை முன்னிட்டு, உலக நன்மைக்காக 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் அஷ்டலிங்க, நவலிங்க அலங்காரத்தில் 1,008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு, அதற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

. இதையடுத்து மூலவருக்கு 1,008 சங்குகளில் உள்ள புனிதநீர் கொண்டு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த 1,008 சங்காபிஷேக பூஜைகளில் விருதுநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

காசி விசுவநாதர் கோவில்

சிவகாசி ஸ்ரீதுர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கார்த்திகை மாதம் 2-வது சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடந்தது. அங்குள்ள சிவன் சன்னதியில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி காசி விசுவநாதர் சமேத விசாலாட்சியம்மன் கோவிலில் சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடந்தது. மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களிலும் சங்காபிஷேகம் நடந்தது.


Related Tags :
Next Story