தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு


தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
x

இளையான்குடி பகுதியில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

சிவகங்கை

இளையான்குடி

இளையான்குடி பேரூராட்சி மாணிக்கவாசகர் நகர் மற்றும் மல்லிபட்டினம் பகுதிகளில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேற வழியின்றி சாலையில் தேங்குகிறது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைகின்றனர்.

இப்பகுதியில் ஆதரவற்ற சிறுவர் பாதுகாப்பு மையம் மற்றும் பள்ளிவாசல் உள்ளதால் வடிகால் அமைத்து தண்ணீரை வெளியேற்றி தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கழிவுநீர் வெளியேற வழியின்றி சாலைகளில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து கழிவுநீர் தேங்குவதை தடுக்கவும், சாக்கடை கால்வாய் அமைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story