தேசியநெடுஞ்சாலையில் சுகாதார சீர்கேடு


தேசியநெடுஞ்சாலையில் சுகாதார சீர்கேடு
x

தேசியநெடுஞ்சாலையில் சுகாதார சீர்கேட்டை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்


விருதுநகர்-சாத்தூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் சூலக்கரை மேட்டில் உள்ள சேவை ரோட்டில் கடந்த 6 மாத காலமாக கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை பல்வேறு நிலைகளில் உள்ள அலுவலர்களுக்கு மனுக்கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலை உள்ளது. ஆதலால் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சி.ஐ.டி.யு. மாநில குழு உறுப்பினர் அசோகன் தெரிவித்துள்ளார்.


Next Story