சங்கரநாராயண சுவாமி கோவிலில்அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு


சங்கரநாராயண சுவாமி கோவிலில்அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு
x

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக வக்கீல் சண்முகையா, முப்பிடாதி, முத்துலட்சுமி, ராமகிருஷ்ணன், வெள்ளைச்சாமி, ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. முன்னிலையில் கோவிலில் பதவி ஏற்றனர்.

சங்கரன்கோவில் யூனியன் தலைவர் லாலா சங்கரபாண்டியன், சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி சரவணன், ம.தி.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story