அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மரக்கன்று


அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மரக்கன்று
x

அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கும், இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை புதிதாக சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கொளஞ்சியப்பா, உடையார்பாளையம் பள்ளி துணை ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மரக்கன்றுகளை மாணவ- மாணவிகளுக்கு வழங்கி வரவேற்றனர்.


Next Story