பொதுமக்களுக்கு மரக்கன்று; எம்.எல்.ஏ. வழங்கினார்


பொதுமக்களுக்கு மரக்கன்று; எம்.எல்.ஏ. வழங்கினார்
x

சுரண்டையில் ராஜீவ்காந்தி பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை பழனி நாடார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.டி.ஜெயபால் தலைமை தாங்கினார். எஸ்.பழனிநாடார் எம்.எல்.ஏ., சுரண்டை நகராட்சி தலைவர் ப.வள்ளி முருகன் ஆகியோர் கலந்துகொண்டு அலங்கரித்து வைக்கப்பட்ட ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, நலத்திட்ட உதவி வழங்கினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கினர். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story