மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி


மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
x

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நகராட்சியின் 16-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட சீனிவாசநகர், கருப்பையா நகர், இந்திராநகர், ஜோதிபுரம், இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை இளைஞர்கள் ஆர்வத்துடன் நட்டனர். இதில் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story