சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,120-க்கு ஏலம்


சத்தியமங்கலம் மார்க்கெட்டில்   மல்லிகைப்பூ கிலோ ரூ.1,120-க்கு ஏலம்
x

மல்லிகைப்பூ

ஈரோடு

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 3½ டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,120-க்கும், முல்லை ரூ.320-க்கும், காக்கடா ரூ.375-க்கும், செண்டுமல்லி ரூ.30-க்கும், பட்டுப்பூ ரூ.23-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.350-க்கும், சம்பங்கி ரூ.60-க்கும், அரளி ரூ.90-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.150-க்கும் ஏலம் போனது.


Next Story