சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,575-க்கு ஏலம்


சத்தியமங்கலம் மார்க்கெட்டில்  மல்லிகைப்பூ கிலோ  ரூ.1,575-க்கு ஏலம்
x

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.1,575-க்கு ஏலம் போனது. ஒரே நாளில் கிலோவுக்கு 750 ரூபாய் விலை உயர்ந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.1,575-க்கு ஏலம் போனது. ஒரே நாளில் கிலோவுக்கு 750 ரூபாய் விலை உயர்ந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பூ மார்க்கெட்

சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்றும் வழக்கம்போல் பூக்கள் ஏலம் காலை 7 மணிக்கு தொடங்கியது.

நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.1,575-க்கும், முல்லை ரூ.700-க்கும், காக்கடா ரூ.430-க்கும், செண்டுமல்லி ரூ.63-க்கும், பட்டுப்பூ ரூ.65-க்கும், ஜாதிமல்லி ரூ.750-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும், சம்பங்கி ரூ.70-க்கும், அரளி ரூ.160-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.170-க்கும் ஏலம் போனது.

மல்லிகைப்பூ கிலோ ரூ.1,575

நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.825-க்கும், முல்லை ரூ.480-க்கும், காக்கடா ரூ.300-க்கும், செண்டுமல்லி ரூ.55-க்கும், பட்டுப்பூ ரூ.31-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.510-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.150-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் விற்பனை ஆனது.

நேற்று முன்தினத்தை விட நேற்று மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.750-ம், முல்லை ரூ.220-ம், காக்கடா ரூ.130-ம், செண்டுமல்லி ரூ.8-ம், பட்டுப்பூ ரூ.34-ம், ஜாதிமல்லி ரூ.150-ம், கனகாம்பரம் ரூ.90-ம், சம்பங்கி ரூ.30-ம், அரளி ரூ.10-ம், செவ்வந்தி ரூ.20-ம் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் மல்லிகைப்பூ கிலோ ரூ.750 உயர்ந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் அனைத்து பூக்களும் விலை உயர்ந்ததாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

போட்டி போட்டு ஏலம்

இதுகுறித்து மார்க்கெட் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறுகையில், 'முகூர்த்த நாட்கள் வருவதால் பூக்களின் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் வியாபாரிகளுக்கு பூ அதிக அளவில் தேவைப்படுகிறது. மேலும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்தும் குறைந்து உள்ளது. இதனால் தேவையை கருத்தில் கொண்டு பூக்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இதன்காரணமாக பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது,' என்றனர்.


Next Story