சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் திரளான பக்தர்கள் தரிசனம்


சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் திரளான பக்தர்கள் தரிசனம்
x

சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வைகாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர்


சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வைகாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு வழிபாட்டில் விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் பள்ளிகள் வரும் ஜூன் 13-ம் தேதியன்று திறக்கப்படுவதை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story